அல்ஹிலால் பள்ளியின் மாணவர்கள் நாங்கள்
கல்வியில் பயன்படும் காலமெல்லாம்
நல்லா சான்கள் முன்னிலையில் நாமும்
அல்லாஹ்வின் அருளை வேண்டுகின்றோம் - II
(அல்ஹிலால் )
ஸ்ரீலங்காவின் கீழ்கரையில்
பெருவளம் மிகு கல்முனை அருகில்
எழில் கொள் சாய்ந்தமருதூரில்
ஒளி விளக்குருவாய் அமைந்திருக்கும் - II
(அல்ஹிலால் )
தேன் தமிழ் மொழியில் தேர்ந்திடவும்
திறனுடன் சிந்தை மலர்ந்திடவும்
வானியக் கலை வளர்ந்திடவும்
வரம் தரு இறைவனின் துணை தேடி - II
(அல்ஹிலால் )
மழலை செல்வங்கள் இயல்பறிந்து
மனநிலை ஓங்கிடும் வகை தெரிந்து
முறையுடன் அறிவுரை வழங்கி வருகின்ற
நிறையாசான்களின் நற்பணியில்- - II
(அல் ஹிலால்)








